ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் வங்கியொன்றில் புதனன்று துப்பாக்கி முனையில் ரூ இரண்டு லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக அங்கிருந்து கிடைத்துள்ள தகவல்களின் மூலம் தெரிய வருவதாவது:
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டம் சந்த்போரா பகுதியில் ஜம்மு காஷ்மீர் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு புதனன்று புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் வங்கியில் இருந்து ரூ இரண்டு லட்சத்தினைக் கொள்ளையடித்தனர்.
அத்துடன் வாங்கிக் காவலாளியிடம் இருந்த 12 போர் வகைத் துப்பாக்கி மற்றும் வங்கி சிசிடிவி பதிவுகளையும் தூக்கிச் சென்று விட்டனர்.
இதுதொடர்பாக சந்த்போரா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.