நடிகர் சல்மான் கான் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த சல்மான்கானை ரசிகர் எடுத்த புகைப்படம் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.