நாக்பூரில் ஹோலி (மார்ச் 29) அன்று அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்தியாவசியக் கடைகளான காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் மட்டும் மதியம் 1 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 28-29 தேதிகளில் நாக்பூரில் ஹோலி கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்ததுடன் பொது மற்றும் தனியார் இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் நேற்று ஒரேநாளில் 3,579 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நாக்பூரில் மார்ச் 31 வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.