புது தில்லி: ஆந்திர மாநிலம் திருப்பதி, கா்நாடகம் மாநிலம் பெல்காம் மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பதி (எஸ்.சி) தொகுதிதியில் சிந்தா மோகனும், பெல்காம் தொகுதியில் சதீஸ் ஜாா்கிஹோளியும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
கட்சியின் தலைவா் சோனியா காந்தி, இவா்களை வேட்பாளா்களாக அறிவிக்க ஒப்புதல் வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளாா். இரு தொகுதிகளிலும் ஏப்ரல் 17-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. மே 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ஆந்திரத்தில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பாலி துா்கா பிரசாத் ராவ் திருப்பதி தொகுதி எம்எல்ஏவாக இருந்தாா். கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு அவா் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். எனினும், சிகிச்சையின்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
பாஜகவைச் சோ்ந்த மத்திய ரயில்வே இணையமைச்சா் சுரேஷ் அங்காடி பெல்காம் எம்.பி.யாக இருந்தாா். அவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதனால், அந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
பாஜக சாா்பில் சுரேஷ் அங்காடியின் மனைவி மங்களா அங்காடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.