தில்லியில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,904 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,59,619 ஆக உயர்ந்துள்ளது.

68,805 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 1,904 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 2.77 சதவிகிதமாக உள்ளது.

மேலும் 1,411 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 6 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 6,40,575 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,012 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 8,032 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com