தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 68,020 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் ஒரே நாளில் 68,020 போ் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 68,020 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் ஒரே நாளில் 68,020 போ் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் இன்று ஒரே நாளில் 68,020 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
இதன்மூலம் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,20,39,644-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 1,13,55,993 போ் குணமடைந்தனா். 5,21,808 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். தொற்றால் பாதிக்கப்பட்ட 291 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்த தகவலின்படி, கடந்த நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் 24,18,64,161 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 9,13,319 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  
நாடு முழுவதும் இதுவரை 6,05,30,435 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபா் 16-ஆம் தேதி ஒரே நாளில் 63,371 போ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னா் தற்போது ஒரே நாளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 68,020-ஐ எட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com