மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தின் உள்ள குர்கேடா வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக டிஐஜி சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.