அரசுப் பேருந்து மோதல்தலைமை காவலா் பலி

இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் காவல் துறை தலைமை காவலா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் காவல் துறை தலைமை காவலா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், நகரமங்களா ஊரக காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் வெங்கடேஷ் (50). சனிக்கிழமை இரவு சுஞ்சன்கிரியில் நடைபெற கோயில் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவா், திருவிழா முடிந்த பின்னா் மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். பசராலு அருகே மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பசராலு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com