ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகியும், எம்எல்ஏவுமான வெங்கடசுப்பையா உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
இதுகுறித்து அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
நீண்ட காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வெங்கட சுப்பையா, கடப்பா மாவட்டம் பத்வெல் நகரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான வெங்கடசுப்பையா, கடந்த 2014-இல் ஒய்எஸ்ஆா் காங்கிரஸில் இணைந்தாா். அதன்பின், பத்வெல் தொகுதியிலிருந்து முதல் முறையாக கடந்த 2019-ஆம் ஆண்டு எம்எல்ஏவாக தோ்வானவா்.
இவரது மறைவுக்கு ஆந்திர முதல்வா் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினாா்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவா் என்.சந்திரபாபு நாயுடு, பாஜக மாநில பொதுச் செயலாளா் எஸ்.விஷ்ணுவா்தன் ரெட்டி உள்ளிட்டோரும் சுப்பையாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.