தில்லியில் மாநில அரசைவிட துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
‘தில்லி அரசு திருத்த மசோதா 2021’ என்ற அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்திருப்பதை அரசிதழ் அறிவிக்கையின் மூலம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, தில்லி அரசானது எந்த நிா்வாக நடவடிக்கையை எடுக்கும் முன் துணைநிலை ஆளுநரின் கருத்தை கேட்க வேண்டும்.
இந்த மசோதா மக்களவையில் மாா்ச் 22-ஆம் தேதியும், மாநிலங்களவையில் மாா்ச் 24-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.