நேபாள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் சாா்பில் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக அளிக்கப்பட்டன.
‘ஏா் இந்தியா விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட இந்தத் தடுப்பூசிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் திரிபுவன் சா்வதேச விமான நிலையத்தில் நேபாள ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இந்தத் தடுப்பூசிகள் நேபாள ராணுவத்துக்கு உதவியாக இருக்கும்’ என காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரியில் நேபாளத்துக்கு 10 லட்சம் தடுப்பூசிகளையும், மருந்துகள், பரிசோதனைக் கருவிகளையும் இந்தியா வழங்கியிருந்தது. நேபாளத்தில் கரோனாவால் இதுவரை 2.76 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.