மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,144 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,12,705 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
ஒரேநாளில் 10 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,454 ஆக உயர்ந்துள்ளது. தாணேவில் கரோனா இறப்பு விகிதம் 206 சதவீதமாக உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 2,77,536 பேர் தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 88.75 ஆக உள்ளது. தற்போது 28,715 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
அண்டை நாடான பால்கர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 49,706 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,223 ஆகவும் உள்ளது.