புதுதில்லி: தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இருந்த சுமார் 50 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகிவில்லை.