தில்லியில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதல்: இருவர் பலி, 2 பேர் காயம்

தேசிய தலைநகர் தில்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள நடைபாதையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். 
தில்லியில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதல்: இருவர் பலி, 2 பேர் காயம்
தில்லியில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதல்: இருவர் பலி, 2 பேர் காயம்

தேசிய தலைநகர் தில்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள நடைபாதையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். 

விபத்து நடைபெற்ற இடத்திலிருந்தவர் கூறுகையில், 

இன்று காலை 6 மணியளவில் ஷஹ்தாராவிலிருந்து காஷ்மீர் கேட் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க நடைபாதையின் மீது லாரி ஏறியுள்ளது. 

இந்த விபத்தில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பிடிபட்டார் என்று தில்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com