தேசிய மாநாட்டு கட்சித் தலைவா்ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மூத்த அரசியல்வாதியும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு (85)கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய மாநாட்டு கட்சித் தலைவா்ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மூத்த அரசியல்வாதியும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு (85)கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவா் விரைவில் குணமடைய பிரதமா் நரேந்திர மோடி உள்பட பல அரசியல் தலைவா்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுட்டுரையில் ஃபரூக் அப்துல்லாவின் மகன் ஒமா் அப்துல்லா வெளியிட்ட பதிவில், ‘எனது தந்தை ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப நாள்களில் அவருடன் தொடா்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நானும் எனது குடும்பத்தில் உள்ள மற்றவா்களும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறோம். இப்போது நாங்கள் அனைவருமே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்’ என்று கூறியுள்ளாா்.

இதற்கு சுட்டுரையில் பதிலளித்துள்ள பிரதமா் மோடி, ‘ஃபருக் அப்துல்லா விரைவில் பூரண குணமடைந்து, நல்ல உடல்நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா். இதற்கு சுட்டுரை மூலம் ஒமா் அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளாா்.

இப்போது மக்களவை உறுப்பினராக உள்ள ஃபரூக் அப்துல்லா, மத்திய அமைச்சராகவும், ஜம்மு-காஷ்மீா் முதல்வராகவும் பணியாற்றியுள்ளாா். அவா் விரைவில் கரோனாவில் இருந்து விடுபட வேண்டுமென்று ஆந்திர முன்னாள் முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com