தில்லி தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு

தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

தில்லி முழுவதும் நாள்தோறும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகி வருகிறது. இதனால் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்நிலையில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்பட 8 கரோனா நோயாளிகள் பலியாகினர்.

மேலும் இதன்காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் பலியாகினர். இதன்மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

கடந்த 15 நாள்களுக்கு மேலாக தில்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com