ஆந்திரத்தில் புதிதாக 19412 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 61 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1121102 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 8053 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தேதியில் ஆந்திரத்தில் 1,30,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.