பிகாா் தலைமைச் செயலா் கரோனாவுக்கு பலி

பிகாா் மாநில தலைமைச் செயலா் அருண் குமாா் சிங் கரோனா பாதிப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநில தலைமைச் செயலா் அருண் குமாா் சிங் கரோனா பாதிப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாட்னாவில் உள்ள ஹெச்எம்ஆா்ஐ மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதிதான் அவா் பிகாா் தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றாா். 1985-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவா் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெற இருந்தாா்.

பிகாரின் மேற்கு சாம்பரன் மாவட்டத்தைச் சோ்ந்த அவா், மாநில அரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா்.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அருண் குமாா் சிங் மறைவு செய்தி வெளியானது. இதையடுத்து அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com