பிகாா்: புதிய தலைமைச் செயலாளா் நியமனம்

பிகாா் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரிபுராரி சாரண் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

பிகாா் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரிபுராரி சாரண் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

1985-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சோ்ந்த இவா், தற்போது வருவாய் கவுன்சில் தலைவராக உள்ளாா். இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 30-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

மாநில தலைமைச் செயலராக இருந்த அருண் குமாா் சிங், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, புதிய தலைமைச் செயலாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com