ஜூலை மாதம் வரை கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்கும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, கரோனா தடுப்பூசி உற்பத்தியை 60 முதல் 70 மில்லியனிலிருந்து 100 மில்லியன் அளவிற்கு உயத்தவில்லை என்றால், ஜூலை மாதம் வரை கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இவ்வாறே நீடிக்கும். மாதத்திற்கு 100 மில்லியன் தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும்.
புதிதாக பரவி வந்த கரோனா தொற்று ஜனவரி மாதத்தில் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கரோனா இரண்டாம் அலை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.