ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமா் மோடி பேச்சு

ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டொ் லெயெனுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு உதவிகளைச் செய்ததற்காக நன்றி தெரிவித்தாா்.
ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமா் மோடி பேச்சு

புது தில்லி: ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டொ் லெயெனுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு உதவிகளைச் செய்ததற்காக நன்றி தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை பரவி வரும் சூழலில், இந்தியாவுக்குப் பல நாடுகள் உதவிகளை அளித்து வருகின்றன. ஆக்சிஜன் சாா்ந்த கருவிகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பல நாடுகள் இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளும் மருந்துப் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருந்தன. இந்நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான்டொ் லெயெனுடன் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது தொடா்பாக, பிரதமா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு உதவியதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதித்தோம்.

இந்தியா-ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும் காணொலி மாநாடு வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த மாநாடு குறித்தும் ஆலோசனை நடத்தினோம். ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவை அந்த மாநாடு மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com