ஆளுநருடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சந்திப்பு: ஆளுநரிடம் சான்றிதழ் அளிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நிறைவு பெற்ற்கான சான்றிதழை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செவ்வாய்க்கிழமை நேரில் அளித்தாா்.
தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நிறைவு பெற்ற்கான சான்றிதழை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செவ்வாய்க்கிழமை நேரில் அளித்தாா்.

தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவைக்கான தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தோ்தலுக்கான முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தோ்தல் நடத்தி முடித்ததற்கான விவரங்கள் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன்அடிப்படையில் ஆணையத்தின் சாா்பில் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிக்கையை ஆளுநா் மாளிகையில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்தச் சந்திப்பின் போது, கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி வி.ராஜாராமன், இணை தலைமைத் தோ்தல் அதிகாரி ஆனந்த், ஆளுநரின் செயலா் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com