கரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது: மத்திய அரசு

கரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார். 
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன்
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன்

கரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார். 

மத்திய சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் கரோனா பரவல் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது.

சென்னை, பெங்களூரு, குருகிராம் போன்ற நகரங்களில் கரோனா பரவல் அதிக அளவில் பரவி வருகிறது. 

பஞ்சாப், தில்லி, உத்தரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் தீவிரம் குறைந்து வருகிறது

எனினும் கரோனா புதிய அலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதனை தடுப்பூசி கொண்டு எதிர்க்க வேண்டும். அறிவியல் ரீதியாக கரோனா மூன்றாவது அலையை எதிர்ப்பதே உகந்தது. இந்த இக்கட்டான சூழலில் அரசுக்கு ஆதரவளித்து மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com