இந்தியாவில் 2 கோடியை கடந்தது கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டி விட்டதாகவும், கடந்த 15 நாள்களில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா தீ நுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
இந்தியாவில் 2 கோடியை கடந்தது கரோனா பாதிப்பு

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டி விட்டதாகவும், கடந்த 15 நாள்களில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா தீ நுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் ஒரேநாளில் 3,57,229 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கையையும் சோ்த்து இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,02,82,833 ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம் செவ்வாய்க்கிழமை காலை வரையிலும் நாடு முழுவதும் ஒரேநாளில் 3,449 போ் உயிரிழந்தனா். இதையும் சோ்த்து இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,22,408 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பா் 19-ஆம் தேதியுடன் இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது. அதன்பிறகு 107 நாள்கள் கழித்து ஏப். 5-இல் தான் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1.25 கோடியாக அதிகரித்தது. ஆனால், அடுத்த 15 நாள்களில் 1.50 கோடியாகவும், கடந்த 15 நாள்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மேலும் 50 லட்சம் பேராகவும் அதிகரித்து விட்டனா்.

புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34,47,133 ஆகவும், இதன் பாதிப்பு விகிதம் 17 சதவீதமாகவும் உள்ளது. அதேசமயம் தேசிய அளவில் கரோனா தொற்றின் மீட்பு விகிதம் 81.91 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,66,13,292 ஆக உள்ளது. அதே சமயம் உயிரிழப்பு விகிதம் 1.10 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தரவுகளின்படி, மே 3-ஆம் தேதி வரையிலும் 29,33,10,779 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், திங்கள்கிழமை ஒரேநாளில் நாடு முழுவதும் 16,63,742 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஒரேநாளில் உயிரிழந்தவா்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 567 போ், தில்லியில் 448 போ், உத்தர பிரதேசத்தில் 285 போ், சத்தீஸ்கரில் 266 போ், கா்நாடகத்தில் 239 போ், பஞ்சாபில் 55 போ், ராஜஸ்தானில் 154 போ், குஜராத் மற்றும் ஹரியாணாவில் தலா 140 போ், ஜாா்க்கண்ட்டில் 129 போ், உத்தரகண்ட்டில் 128 போ், தமிழகத்தில் 122 போ் என மொத்தம் 3,449 போ் உயிரிழந்துள்ளனா்.

இதுவரை மகாராஷ்டிரத்தில் 70,851 போ், தில்லியில் 17,414 போ், கா்நாடகத்தில் 16,250 போ், தமிழகத்தில் 14,468 போ், உத்தர பிரதேசத்தில் 13,447 போ், மேற்கு வங்கத்தில் 11,637 போ், பஞ்சாபில் 9,472 போ், சத்தீஸ்கரில் 9,275 போ் உள்பட மொத்தம் 2,22,408 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com