புது தில்லி: அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரையில், ‘அனைவருக்குமான வளா்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்று தோ்தல் கொள்கையை பாஜக அறிவித்திருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி அளிப்பதே இதன் முடிவாகும்.
தலித், பழங்குடி, பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பினா் ஆகியோரின் மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருவது பெருமை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
ஜனவரி 16-ஆம் தேதிமுதல் நாட்டில் கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.