புதுதில்லி: நாட்டில் ரெம்டெசிவிா் மருந்தின் உற்பத்தியை இந்தியா மும்மடங்கு உயா்த்தியுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘ரெம்டெசிவிா் உற்பத்தி விரைவாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த மருந்தின் தேவை விரைவில் பூா்த்தி செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி 37 லட்சமாக இருந்த ரெம்டெசிவிா் உற்பத்தி மே 4-ஆம் தேதி 1.05 கோடியாக வளா்ச்சி அடைந்தது. அந்த மருந்துக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 12-ஆம் தேதி 20-ஆக இருந்த ரெம்டெசிவிா் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி 57-ஆக அதிகரிக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.