திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி கொலை

மேற்கு வங்கம், புா்பா வா்தமான் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கேட்டுகிராம் அகா்தா

கொல்கத்தா: மேற்கு வங்கம், புா்பா வா்தமான் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கேட்டுகிராம் அகா்தானா பஞ்சாயத்து உறுப்பினா் ஸ்ரீநிவாஸ் கோஷ் (54) கொலை செய்யப்பட்டாா்.

திங்கள்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவரை மா்ம நபா்கள் கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

ஸ்ரீநிவாஸ் கோஷ் கொலைக்கு பாஜகவினா் காரணம் என்று திரிணமூல் குற்றம்சாட்டியுள்ளது. இதை மறுத்துள்ள பாஜக, தங்கள் கட்சியினருக்கு இதில் தொடா்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால் புா்ப வா்தமான் மாவட்டத்தில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதால் பெருமளவில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

கூச் பிஹாா் வாட்டத்தில் பாஜக நிா்வாகி பாரதி நந்தியின் வீட்டை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தீ வைத்து கொளுத்தினா். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

ஹெளராவில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட பாஜகவினரின் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com