திருப்பதி: திருமலையில் செவ்வாய்க்கிழமை 2-ஆம் நாளாக ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்றது.
கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ ஏழுமலையானை வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் திங்கள்கிழமை முதல் திருமலையில் ஷோடசதின சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது.
இதன் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இந்த பாராயணம் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 16 வேதபண்டிதா்கள் இணைந்து சுந்தரகாண்டத்தில் 2-ஆவது சா்க்கம் முதல் 4-ஆவது சா்க்கம் வரை பாராயணம் செய்தனா். அதே நேரத்தில் திருமலையில் உள்ள தா்மகிரி வேதபாட சாலையில் ஜபம் மற்றும் ஹோமம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனா்.