பாக்தாத் அருகே 3 ஐ.எஸ் தலைவர்கள் சுட்டுக் கொலை 

பாக்தாத் அருகே ஈராக்கிய பயங்கரவாத தடுப்பு சேவை (சி.டி.எஸ்) கமாண்டோக்கள், ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் மூன்று தலைவர்களை சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பாக்தாத் அருகே 3 ஐ.எஸ் தலைவர்கள் சுட்டுக் கொலை 
பாக்தாத் அருகே 3 ஐ.எஸ் தலைவர்கள் சுட்டுக் கொலை 

பாக்தாத் அருகே ஈராக்கிய பயங்கரவாத தடுப்பு சேவை (சி.டி.எஸ்) கமாண்டோக்கள், ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் மூன்று தலைவர்களை சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈராக் படைகளின் தளபதியின் செய்தித் தொடர்பாளர் யஹியா ரசூல் வெளியிட்ட அறிக்கையில், 

பாக்தாத்தின் தென்மேற்கே அல்-ரத்வானியா பகுதியில் சி.டி.எஸ் படைகள் ஐ.எஸ் பயங்கர குழுவின் மறைவிடத்தைத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஐ.எஸ்.தலைவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த ஜனவரி 21ஆம் தேதி பாக்தாத் நகரத்தில் உள்ள பாப் அல்-ஷார்ஜி பகுதியில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 116 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com