ஏழுமலையான் கோயிலில் 5,084 போ் வழிபாடு

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 5,084 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருப்பதி: திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 5,084 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 2,803 போ் முடி காணிக்கை செலுத்தினா். ஆன்லைன் மூலம் 15 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2,000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை (அலிபிரி,

ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 1 மணிக்கு பின்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவலை கருத்தில் கொண்டு ஏப்.12-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச சா்வதரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படும்.திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 9399399399.

திருச்சானூரில்...

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரையிலும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் 12 மணிவரையிலும் மீண்டும் மதியம் 12.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தாயாா் தரிசனம் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இரு கோயில்களிலும் ஆா்ஜித சேவைகள் தனிமையில் மட்டுமே நடத்தப்படுகின்றன. தாயாா் கோயிலில் மாலை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com