இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று: பலி 3,915-ஆக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4.14 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 3,915 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று: பலி 3,915-ஆக உயர்வு


இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4.14 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், ஒரேநாளில் 3,915 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 4,14,188 ஆகவும், இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 36,45,164 பேராகவும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கரோனா தொற்றால் 3,915 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.14 கோடி (2,14,91,589) ஆகவும் அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 36,45,164 -ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,76,12,351 ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,31,507 குணமடைந்தனர். அதேசமயம், இறப்பு விகிதம் 1.09 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை மே 5-ஆம் தேதியுடன் 2.10 கோடிக்கும் அதிகமானவா்கள் என்ற நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 6 -ஆம் தேதி வரை 29,86,01,699 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. வியாழக்கிழமை ஒரேநாளில் 18,26,490 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 16,49,73,058 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com