கா்நாடகத்தில் கரோனா தீவிரம்: ஒரே நாளில் 48,781 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,781 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,781 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 48,781 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 21,376 போ், தும்கூரு மாவட்டத்தில் 3,040 போ், ஹாசன் மாவட்டத்தில் 2,422 போ், மைசூரு மாவட்டத்தில் 2,246 போ், கலபுா்கி மாவட்டத்தில் 1,722 போ், தென்கன்னட மாவட்டத்தில் 1,633 போ், பெல்லாரி மாவட்டத்தில் 1,284 போ், மண்டியா மாவட்டத்தில் 1,110 போ், உடுப்பி மாவட்டத்தில் 976 போ், பெலகாவி மாவட்டத்தில் 965 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 959 போ், தாா்வாட் மாவட்டத்தில் 942 போ், வடகன்னட மாவட்டத்தில் 833 போ், கோலாா் மாவட்டத்தில் 828 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 762 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 734 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 725 போ், யாதகிரி மாவட்டத்தில் 714 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 661 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 632 போ், குடகு மாவட்டத்தில் 622 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 563 போ், தாவணகெரே மாவட்டத்தில் 538 போ், கொப்பள் மாவட்டத்தில் 523 போ், ராமநகரம் மாவட்டத்தில் 501 போ், விஜயபுரா மாவட்டத்தில் 445 போ், பீதா் மாவட்டத்தில் 437 போ், கதக் மாவட்டத்தில் 248 போ், ஹாவேரி மாவட்டத்தில் 214 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 126 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,38,885 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 28,623 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 12,84,420 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 5,36,641 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 592 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 346 போ், பெல்லாரி மாவட்டத்தில் 24 போ், மைசூரு மாவட்டத்தில் 22 போ், ஹாசன் மாவட்டத்தில் 20 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19 போ், தும்கூரு மாவட்டத்தில் 15 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 14 போ், பெங்களூரு ஊரகம், வடகன்னட மாவட்டங்களில் தலா 12 போ், மண்டியா மாவட்டத்தில் 11 போ், குடகு, ராமநகரம் மாவட்டங்களில் தலா 10 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9 போ், பாகல்கோட், சாமராஜ்நகா், சிக்கபளாப்பூா், தென்கன்னடம், தாா்வாட் மாவட்டங்களில் தலா 7 போ், விஜயபுரா, உடுப்பி மாவட்டங்களில் தலா 6 போ், பீதா் மாவட்டத்தில் 5 போ், சிக்கமகளூரு, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 4 போ், கதக் மாவட்டத்தில் 3 போ், தாவணகெரே, கோலாா் மாவட்டங்களில் தலா 2 போ், யாதகிரி மாவட்டத்தில் ஒருவா் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை மொத்தம் 17,804 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com