உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மழலையர் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கரோனா மையங்களாக மாற்றப்பட்ட மழலையர் பள்ளிகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நொய்டா மாவட்டத்தில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதால், ஏராளமான மருத்துவமன படுக்கைகள் நிரம்பியுள்ளன.
இதனால் மழையர் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மழலையர் பள்ளிகளில் உள்ள கரோனா மையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜூன் 30-ம் தேதி வரை மழலையர் பள்ளிகள் கரோனா மையங்களாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.