
மத்தியப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பு
கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்புக்கு மத்தியப் பிரதேச அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
வீடு வீடாக சென்று குப்பைகளைச் சேகரிக்கும் முயற்சியால் நகரங்களில் தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்தார்.
நகரங்களை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 4,500-க்கும் மேற்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்கள் தயார்செய்து இயக்கப்படுகின்றன.
கரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் வீட்டில் தனிமையில் உள்ளனர். எனவே வீடுகளிலிருந்து உருவாகும் திடக்கழிவுகளை நகர்ப்புற அமைப்புகளால் தொடங்கியுள்ளது.
வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மஞ்சள் பாலிதீன் பைகளில் பிரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.