கேரளத்தில் ஒரேநாளில் 39,955 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் 39,955 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கேரளத்தில் ஒரேநாளில் 39,955 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் 39,955 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 1,39,656 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 39,955 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 4,38,913 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 97 பேர் பலியானார்கள். கரோனாவிலிருந்து இன்று மட்டும் 33,733 பேர் குணமடைந்தனர். இதுவரை 16,05,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10,02,443 கண்காணிப்பில் உள்ளனர். 
740 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com