திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற கரோனாவால் பாதிக்கப்பட்டவா் மீது வழக்குப் பதிவு

கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பண்டுவால் வட்டம், மணிநல்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்பூஜாரி. இவருக்கு மே 10-ஆம் தேதி கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை 2 வாரத்துக்கு தனிமையில் இருந்து சிகிச்சை பெற மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காா்காளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ராஜேஷ்பூஜாரி கலந்து கொண்டுள்ளாா். இதுகுறித்து காவல் நிலையத்துக்கு சென்ற தகவலின் பேரில், ராஜேஷ்பூஜாரி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com