சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிரைசைக்கிளில் முட்டைகளை திருடிய காவலர் பணியிடை நீக்கம்

சண்டிகரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிரைசைக்கிளில் இருந்து முட்டைகளை திருடிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிரைசைக்கிளில் முட்டைகளை திருடிய காவலர் பணியிடை நீக்கம்

சண்டிகரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிரைசைக்கிளில் இருந்து முட்டைகளை திருடிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பஞ்சாப் மாநிலம், சண்டிகர் அருகே பதேகார்க் என்ற பகுதியில் சாலையோரத்தில் முட்டைகளுடன் டிரைசைக்கிள் ஒன்று தனியாக நிறுத்திவைக்கப்பட்டிந்தது. அப்போது அந்த பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் முட்டையுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிரைசைக்கிள் அருகே சென்றார். 

டிரைசைக்கிள் பக்கத்தில் யாரும் இல்லாததை அறிந்த அவர் உடனே டிரைசைக்கிளில் இருந்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்தார். இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் விடியோவாக எடுத்து இணையத்தில் பதவிட்டுள்ளார். இதையடுத்து அந்த விடியோ இணையத்தளங்களில் வைரலானது. 

உடனே இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தலைமை காவலர் ப்ரித்பால்சிங் என்பதை கண்டறிந்தனர். விசாரணையைத் தொடர்ந்து அந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com