தெலங்கானாவில் மே.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக மே 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தெலங்கானாவில் மே.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
தெலங்கானாவில் மே.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக மே 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

தெலங்கானாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 12 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மே 30 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக காய்கறி, மளிகைக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com