மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: இதுவரை 3 பேர் பலி 

மும்பை மாநகரில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: இதுவரை 3 பேர் பலி 


மும்பை மாநகரில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழையுடன், 80-90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று மும்பை மாநகராட்சி காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதுதொடர்பாக மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

கனமழை, சூறாவளிக் காற்றில் சிக்கி பால்கரில் 2 பேர் பேரும், தாணேவில் ஒருவரும் உயிரிழந்தனர். 

திங்களன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மும்பை கடற்கரையிலிருந்து குஜராத் நோக்கி நகர்ந்த புயலானது, ​​தெற்கு மும்பையின் கொலாபாவில் 189 மிமீ மழையும், மேற்கு புறநகரில் உள்ள சாண்டாக்ரூஸில் 194 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக பிஎம்சி தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் அதன் அண்டை பகுதிகளில் 114 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு, பலத்த மழையும் பெய்தது.

தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com