மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

இரண்டு கோடிக்கும் அதிகமான (2,04,96,525) கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

இரண்டு கோடிக்கும் அதிகமான (2,04,96,525) கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாள்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2,94,660 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.

இதுவரை, சுமாா் 20 கோடி (20,76,10,230) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான நிலவரப்படி, 18,71,13,705 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உள்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக நிலவரம்: தமிழ்நாட்டுக்கு இதுவரை 86,55,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 72,35,714 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 14,19,296 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின் வசம் கையிருப்பில் உள்ளன.

புதுச்சேரி நிலவரம் : புதுச்சேரி யூனியன்பி ரதேசத்துக்கு இதுவரை 4,27,140 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 2,31,405 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,95,735 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரிவசம் கையிருப்பில் உள்ளன. மேலும் 29,890 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com