அசாம் மாநிலம் கம்ருபூரில் புதன்கிழமை ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை மாலை 5.55 மணியளவில் அசாம் மாநிலம் கம்ருபூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட ரிக்டர் அளவில் 3.2ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.