புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று (மே 20) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவன முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதில் கரோனா பரவி வரும் காலகட்டத்தில் மாணவர்களுக்கு இணையவழிக் கல்வியில் நடத்த வேண்டிய மேம்பாடுகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.