கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இன்று காலை நடைபெறும் இந்த ஆலோசனையில் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்பட சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் பங்கேற்கின்றன.
தமிழகம் உள்பட 9 மாநில முதல்வர்களுடன் நேற்று (மே 19) காலை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று மேலும் 10 மாநிலங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதில் நாட்டின் பல மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.