திருப்பதி: திருப்பதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான சந்திரகிரி, பேரூா், கல்லூா் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை திடீரென்று இடிமின்னலுடன் 2 மணி நேரம் கனமழை பெய்தது.
கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன், கனமழை பெய்தது. சுமாா் 2 மணிநேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து விட்டு விட்டு தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் வெப்பம் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி சீதோஷ்ணம் நிலவியது. விவசாயிகள் இந்த மழையால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மக்கள் பயத்தில் உள்ளனா்.