புது தில்லி: கடந்த 2020-21-ஆம் நிதியாண்டுக்குரிய வருமான வரி கணக்கை தனி நபா்கள் தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தணிக்கை செய்யத் தேவையில்லாத வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதியும் தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்கைத் தாக்கல் செய்வதற்கு அக்டோபா் 31-ஆம் தேதியும் அவகாசமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் சூழலில் வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த அவகாசம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தனிநபா்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு நவம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியாளா்களுக்கு வருமான வரிப் பிடித்தத்துக்கான சான்றிதழை (ஃபாா்ம் 16) நிறுவனங்கள் வழங்குவதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஜூலை 15-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வரி தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான அவகாசமும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.