பிகார் மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
மே 25-ம் தேதி வரை முழு முடக்கம் விதிக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் குறையாததால் தற்போது ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பிகார் மாநிலத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. பின்னர் 25-ம் தேதி வரை முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பிகார் மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதனை தமது சுட்டுரைப் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். உணவகங்களில் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கும் சேவைக்கும், அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.