'யாஸ்' புயல்: 25 ரயில்கள் தற்காலிகமாக ரத்து

யாஸ் புயல் காரணமாக 25 ரயில்களின் சேவையை கிழக்கு ரயில்வே தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
'யாஸ்' புயல்: 25 ரயில்கள் தற்காலிகமாக ரத்து
'யாஸ்' புயல்: 25 ரயில்கள் தற்காலிகமாக ரத்து

யாஸ் புயல் காரணமாக 25 ரயில்களின் சேவையை கிழக்கு ரயில்வே தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது.

இதன் விளைவாக இன்று (மே 24) முதல் வரும் 29-ம் தேதி வரை ரயில்களின் சேவையை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நியூ தின்சுகியா - தாம்பரம் சிறப்பு ரயில் மே 24-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் - நியூ டின்சுகியா சிறப்பு ரயில் மே 27-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

ஜசிதி (ஜார்கண்ட்) - தாம்பரம் சிறப்பு ரயில் மே 26-ல் ரத்து. தாம்பரம் - ஜசிதி (ஜார்கண்ட்) சிறப்பு ரயில் 29-ம் தேதி ரத்து. 

சென்னை சென்ட்ரல் - நியூ ஜல்பைகுரி சிறப்பு ரயில் மே 26-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. நியூ ஜல்பைகுரி - சென்னை ரயில் மே 28-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com