கத்தார் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
கடந்த மார்ச் 25ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து 20 மீனவர்களையும், கேரளத்தின் 4 மீனவர்களையும் உள்ளிடக்கிய படகு கத்தார் நாட்டு கடல் எல்லையில் சிறைபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டது.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் அவர்களின் நிலையறியாது அவர்களது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
எனவே கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வாயிலாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.