தெலங்கானாவில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது குறித்து வரும் 30-ம் தேதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
தெலங்கானாவில் கடந்த 12-ம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பொது முடக்கத்தை மே 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வரும் 30-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இதுதவிர நெல் கொள்முதல் முறை உள்ளிட்ட வேளாண் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.