'யாஸ்' புயல் அதிதீவிர புயலாக மாறி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது.
மழையுடன் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. சூறைக்காற்றில் வீடுகள், கட்டடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன
கடலோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
புயல் கரையைக் கடப்பதால், ஒடிசாவில் கடலோரப்பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் ரயில்கள் கவிழ்ந்துவிடாதவாறு தண்டவாளங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.